கொரோனா ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படும் : பிரிட்டன் அரசு ஆலோசகர் நீல் ஃபர்குசன் தகவல்
Apr 5 2020 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால், பிரிட்டனில் விரைவில் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று, அந்நாட்டு அரசு ஆலோசகர் நீல் ஃபர்குசன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு, 4 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இளவரசர் சார்லஸ் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பிரிட்டனில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இது குறித்து பேட்டியளித்த பிரிட்டன் அரசு ஆலோசகர் நீல் ஃபர்குசன், கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது, நல்ல அறிகுறி என்றும், இதே நிலை நீடித்தால், கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்ததால் பாதிப்பு குறைந்ததாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மே மாத இறுதி வரையாவது அமல்படுத்த வேண்டும் என்றும் நீல் ஃபர்குசன் கூறினார்.