துருக்கியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 31 நகரங்களின் எல்லைகள் மூடல்
Apr 5 2020 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 31 நகரங்களின் எல்லைகள் மூடப்பட்டன.
துருக்கியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 425 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டிவரும் துருக்கி அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. நெரிசலான இடங்கள், கடைகள் மற்றும் பணியிடங்களில், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வயதான குடிமக்கள் மற்றும் 20 வயதிற்கு உட்பட்டவர்கள், வீட்டிலேயே தங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இஸ்தான்புல், அங்காரா உள்ளிட்ட 31 நகரங்களின் எல்லைகள் மூடப்பட்டன. மேலும், போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.