வடகொரியா முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதால் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை : அதிபர் கிம் ஜாங் உன் தகவல்
Apr 5 2020 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவில் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவிய கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையிலும், அண்டை நாடான வடகொரியாவில் யாரும் உயிரிழக்கவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் வட கொரியா, தொடர்ந்து பொய் தகவல்களை கூறி வருவதாகவும், பலியானோர் பற்றிய விபரங்களை மறைப்பதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ், சீனாவில் பரவத் துவங்கியதுமே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாகவும், வெளிநாடுகளில் இருந்து, யாரும் வராதபடி, விமான, கப்பல் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டதாக வட கொரிய வெளியுறத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஏற்கெனவே வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதால், ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் வடகொரிய தெரிவித்துள்ளது.