அமெரிக்காவில் விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் - நியூயார்க் உயிரியல் பூங்காவில் வைரஸ் தொற்றால் புலிக்கு பாதிப்பு
Apr 6 2020 12:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனாவால் நடுங்கி போயிருக்கும் அமெரிக்காவில், அந்த நோய் தொற்று விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. உலகிலேயே முதன்முறையாக அந்நாட்டின் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் பாதிப்பையும், உயிர்சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நியூயார்க் நகரம் இந்த வைரஸ் தொற்றால் கதிகலங்கிப் போயிருக்கிறது. அங்கு அமைந்துள்ள Bronx உயிரியல் பூங்காவில், 4 வயது புலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில புலிகளுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. விலங்குகளை கொரோனா தாக்காது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகிலேயே முதன்முறையாக புலி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.