கொரோனா சவாலை அனைவரும் ஒன்றுபட்டு முறியடிப்போம் - இங்கிலாந்து அரசி எலிசபெத் ராணி நாட்டு மக்களுக்கு உரை
Apr 6 2020 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா என்னும் கொடிய வைரஸ் சவாலை அனைவரும் ஒன்றுபட்டு எதிர் கொண்டு வெற்றி பெறுவோம் என இங்கிலாந்து அரசி எலிசபெத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இங்கிலாந்து ராணி எலிசபெத், சவாலான இந்த சூழ்நிலையில் முன்னிலையில் நிற்கும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். 93 வயதான அவர், தொலைக்காட்சிகளில் மிகவும் அரிதாகவே தோன்றுவார். தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மீண்டும் உரையாற்றினார். தமது வாழ்நாளில் தொலைக்காட்சியில் ராணி எலிசபெத் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது இது 5வது முறையாகும்.