கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்குப் பின் முதன் முறையாக தென்கொரியாவில் 24 மணிநேரத்தில் 50-க்கும் குறைவானவர்களே பாதிப்பு
Apr 6 2020 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்குப் பின் முதன் முறையாக தென்கொரியாவில் 24 மணிநேரத்தில் ஐம்பதுக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தென்கொரியாவில் பரவிய கொரோனா நோய் தொற்று பிப்ரவரி மாதக்கடைசியில் மிக வேகமாகப் பரவியது. தற்போதைய வரை அங்கு பத்தாயிரத்து 284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 81 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று 47 பேருக்கு மட்டுமே நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் இதுபோன்ற குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், மீண்டும் பெரிய அளவில் நோய் பரவும் ஆபத்து இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.