அமெரிக்க மக்கள் கடும் துயரத்தை சந்திக்கப் போகிறார்கள் : சர்ஜன் ஜெனரல் வைஸ் அட்மிரல் எச்சரிக்கை
Apr 6 2020 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இரட்டை கோபுர தாக்குதல், Pearl Harbor தாக்குதல் ஆகியவற்றின்போது சந்தித்த துயர நிலையை போன்று, இந்த வாரமும், அமெரிக்க மக்கள் கடும் துயரத்தை சந்திக்கப் போகிறார்கள் என்று அந்நாட்டு சர்ஜன் ஜெனரல் வைஸ் அட்மிரல் Jerome Adams எச்சரித்துள்ளார்.
கொரோனா தாண்டவம் அமெரிக்காவில் உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் வைஸ் அட்மிரல் டாக்டர் Jerome Adams, அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து பேட்டி அளித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் ஜப்பான் நடத்திய Pearl Harbor தாக்குதல், தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கோபுர தாக்குதல் ஆகியவை மோசமான சம்பவங்கள் என்றும், அந்நேரங்களில் அமெரிக்க மக்கள் மிக மோசமான துயர நிலையை அடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அதேபோன்ற மிக மோசமான துயரத்தை, அமெரிக்க மக்கள் இந்த வாரம் சத்திக்க உள்ளதாக கூறினார்.
இந்த சூழலை புரிந்துகொண்டு, கொரோனாவை ஒழிக்க மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கொரோனாவால் அடுத்து வரும் வாரங்களில், ஒரு லட்சம் முதல் 2 லட்சம் அமெரிக்க மக்கள் உயிரிழக்கக்கூடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.