நியூயார்க்கில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது : ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தகவல்
Apr 6 2020 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 4,159 ஆக உயர்ந்தள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக கொரானோ வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்கா முழுவதுமே மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நியூயார்க் மேயர் ஆன்ட்ரு கியுமோ, இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள தங்களுக்கு உதவிகள் வேண்டும் எனக் கூறினார். கடந்த 3 நாளில் பலி எண்ணிக்கை 2 மடங்காகி உள்ளதாக தெரிவித்த அவர், மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான முகக் கவசம், உடல் முழுவதையும் மூடும் ஆடைகள் வென்டிலேட்டர்கள் அதிகளவில் தேவைப்படுவதாக தெரிவித்தார். நியூயார்க் மாநிலத்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 4,159 ஆக உயர்ந்தள்ளதாக தெரிவித்த அம்மாநில ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, கடந்த 3 நாளில் பலி எண்ணிக்கை 2 மடங்காகி உள்ளது என தெரிவித்தார்.