சிங்கப்பூரில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு - கடும் கட்டுப்பாடுகளை மீறி வைரஸ் பரவுவதால் மக்கள் அச்சம்
Apr 6 2020 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கப்பூரில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நேற்று மேலும் 120 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி சராசரி அளவைவிட அதிகமாகும் என, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் அங்கு அமலில் உள்ளபோதும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 309ஆக அதிகரித்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் 2 தங்குமிடங்கள் மூடப்பட்டுள்ளன.