ஸ்பெயின் நாட்டில், இறப்பு விகிதம் அதிகரிப்பதால் வருவதால், சவப்பெட்டிகளுக்கான தேவை அதிகரிப்பு - நெருக்கடிகளை எதிர்கொள்ளாமல் பொதுமக்கள் தவிப்பு
Apr 6 2020 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் நாட்டில், கொரோனா இறப்பு விகிதம் உயர்ந்து வருவதால், சவப்பெட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
கொரோனாவால் மோசமான பாதிப்பிற்குள்ளான இத்தாலியைப் போலவே, ஸ்பெயினிலும், கடந்த சில நாட்களாக, நோய்த்தொற்று மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 674 பேர் உயிரிழந்துள்ளனர். நிலைமை இவ்வாறு மோசமாக சென்று கொண்டிருப்பதால், அங்கு, சவப்பெட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. முந்தைய காலத்தைவிட தற்போது 8 முதல் 10 மடங்கு அதிகமாக, சவப்பெட்டிகளை உற்பத்தி செய்து வருவதாக, வால்டெமோரோவில் உள்ள ஒரு சவப்பெட்டி நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.