சீனாவில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் குறைந்துபோன மாசு : பசுமை பாதுகாப்பு அமைப்பு தகவல்
Apr 6 2020 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் பெய்ஜிங் நகரில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு காற்றின் தரம் மேம்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த பிப்ரவரியில், பெய்ஜிங்கில் உள்ள வீதிகள் முடக்கப்பட்டதுடன், தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இது, பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், காற்று மாசுபாடு குறைய, நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. தொழிற்சாலைகள் செயல்படாததால், பெய்ஜிங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், காற்றில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு பெருமளவு குறைந்து காணப்பட்டதாகவும், காற்று மாசுபாடு 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும், பசுமை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், பொருளாதார பாதிப்பை ஈடுசெய்யும் வகையில், சீனாவின் பிற தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரித்து வருவதால், காற்று மாசுபாடு மற்றும் கார்பன் கார்பன் வெளியேற்றம் மீண்டும் ஏற்படக்கூடும் என்று, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.