வளைகுடா நாடுகளில் ரமலான் பண்டிகை : நேற்றே பிறை தெரிந்ததால் இன்று கொண்டாட்டம்
May 24 2020 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில், நேற்று பிறை தெரிந்ததால், ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
புனித ரமலான் மாதத்தின் இறுதி நாளான நேற்று, சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் பிறை தெரிந்தது. இதையடுத்து இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, லிபியா, சிரியா, ஜோர்டான், ஜெருசலம், லெபனான் மற்றும் சவுதி, கத்தார், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் வழக்கமாக நடைபெறும் தொழுகைக்கு, சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தடை விதித்துள்ளன. மக்கள் வீடுகளிலேயே தொழுகை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.