உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - பரிசோதனையில் வெற்றி பெற்றதாக சீனா அறிவிப்பு
May 25 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லியான கொரோனாவுக்கு, தடுப்பு மருந்து சோதனையில் வெற்றியடைந்து உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். பொருளாதாரமும் சரிந்துள்ளது. உலக நாடுகள் பல கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டறிய தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. Ad5 - nCov என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை சீனாவில் உள்ள 108 தன்னார்வலர்களுக்கு பரிசோதித்ததில் அது வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்த மருந்து, சார்ஸ் வைரஸுக்கும் மருந்தாக பயன்படக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து 2ம் கட்டமாக 501 பேருக்கு இந்த மருந்தை பரிசோதிக்க இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இருப்பினும், சீனாவின் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி உள்ளிட்ட விஞ்ஞானிகள், SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு எதிராக, இந்த தடுப்பு மருந்து பாதுகாக்கிறதா என்பதை உறுதிப்படுத்த மேலும் ஆராய்ச்சிகள் தேவை என்றனர்.
108 ஆரோக்கியமான தன்னார்வலர்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், தடுப்பு மருந்து 28 நாட்களுக்குப் பிறகு நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய முடிவுகளைக் கொடுத்துள்ளது. இறுதி முடிவுகள் ஆறு மாதங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். "இந்த முடிவுகள் ஒரு முக்கியமான மைல்கல்லைக் எட்டியுள்ளன.