சீனாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டத்துக்கு ஹாங்காங்க் நகர மக்கள் கடும் எதிர்ப்பு
May 25 2020 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹாங்காங் நகர மக்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவைப் பெருக்கும் முயற்சியில் சீன அரசு தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது.
1997ம் ஆண்டு, பிரிட்டனின் பிடியில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் வந்த ஹாங்காங்க் நகர மக்களுக்கு, சீனாவின் சட்டங்கள் பொருந்தாது என்றும், எப்போதும் போலவே அவர்களுக்கு கூடுதல் உரிமைகள் அளிக்கப்படும் என்றும் சீனா உறுதியளித்தது. பிரிட்டன் அரசுடனான உடன்படிக்கையில் இதற்கு சீனா ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஹாங்காங்க் நகர மக்களையும் ஒட்டுமொத்த சீனாவின் சட்டதிட்டங்களுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை அதிபர் ஜி ஜின்பிங் மேற்கொண்டுவருகிறார். இதை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கூடிய 13வது தேசிய மக்கள் பேரவையின் மூன்றாவது கூட்டத் தொடரில் புதிய பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதம் நடைபெற்றுவருகிறது. இதற்கு ஹாங்காங் நகர மக்களிடம் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், அதற்கான ஆதரவை அதிகரிக்கும் முயற்சிகளில், அரசுக்குச் சொன்தமாக செய்தி நிறுவனமான சிசிடிவி இறங்கியுள்ளது.