ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸில், ஊரடங்கு முடிந்து பள்ளிக்குத் திரும்பிய குழந்தைகள் - உற்சாகத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்
May 25 2020 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவுக்குப் பின் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நியூ சவுத்வேல்ஸ் மாநிலம் தான் ஆஸ்திதேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் நிலையல், பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் பள்ளிகளுக்கு வந்த குழந்தைகளை ஆசிரியர்கள் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர். முன்னதாக அனைத்து வகுப்பறைகளும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 7 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பின் மிகக்கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டதால் கொரோனா வைரஸ் பரவியது கட்டுப்படுத்தப்பட்டது.