வெனிசூலாவில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு : ஈரானிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள்
May 25 2020 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்களுடன் அனுப்பிவைக்கப்பட்ட கப்பல் வெனிசூலா நாட்டை நெருங்கியுள்ளது.
அமெரிக்க அரசின் பொருளாதாரத் தடைகளால் உலகில் பல நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா நோய் தொற்றும் இழப்புக்களை ஏற்படுத்திவரும் நிலையில், வெனிசூலாவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், ஈரான் நாட்டிலிருந்து பெட்ரோலிய பொருட்கள் அடங்கிய கப்பல் அனுப்பிவைக்கப்பட்டது. அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த 15 லட்சத்து 30 ஆயிரம் பேரல் எரிபொருட்கள் வெனிசூலாவின் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானின் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நன்றி தெரிவித்துள்ளார்.