கொரோனா பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தடை - இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதால் திடீர் நடவடிக்கை
May 26 2020 2:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால், கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனும் மருந்தை உலக சுகாதார நிறுவனம் தடை செய்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பலவகையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மலேரியாவுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது. அதன் மூலம் நோயாளிகள் குணமானதாக கூறப்பட்டது. ஆனால் இந்த மருந்தால் கடுமையானப் பக்கவிளைவுகள் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த மருந்தை தொற்று உள்ளவர்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் மருத்துவ இதழ் ஒன்று வெளியிட்ட ஆய்வில் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள், மற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளை விட அதிக அளவில் இறப்பை சந்தித்து வருவதாக ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதனால் உலக சுகாதார நிறுவனம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தற்போது தற்காலிக தடை விதித்துள்ளது.