ஜப்பானில் அவசரநிலை பிரகடனம் நாடு முழுவதும் முழுமையாக நீக்கம் - நோய் தொற்று அதிகரித்தால் மீண்டும் அமல் என அறிவிப்பு
May 27 2020 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில் கொரோனா வைரஸ் அவசர நிலை பிரகடனம் முழுமையாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் டோக்கியோ உள்ளிட்ட 5 பகுதிகளில் மட்டும் கொரோனா வைரஸ் தொடர்பான அவசர நிலை பிரடகனம் அமலில் இருந்தது. மற்ற பகுதிகளில் வைரஸ் பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு விதிகள் ஏற்கெனவே திரும்பப்பெறப்பட்டன. இந்நிலையில், அவசர நிலை பிரகனடம் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஷின்ஷோ அபே, வைரஸ் தொற்று அதிகரித்தால், மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்றார். கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் 6 மாநிலங்களில் மட்டும் அவசரநிலையை பிரகடனம் செய்த ஜப்பான் அரசு, பின்னர் அதை நாடு முழுவதும் விரிவுபடுத்தியது.