ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - 10 நாட்கள் துக்க தினம் கடைபிடிக்கப்படும் என அறிவிப்பு
May 27 2020 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோருக்காக பத்து நாட்கள் துக்கதினம் கடைபிடிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் இரண்டு லட்சத்துககும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக மீண்டுவருகிறது. இதற்கிடையே, கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களுக்காக பத்து நாட்கள் துக்க தினம் கடைபிடிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. பத்து நாட்களுக்குப் பின் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலத்தப்படும் என ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.