பெரு நாட்டில் பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்க மறுக்கும் பொதுமக்கள் - கொரோனா வைரஸ் பாதிக்கும் அபாயம் தொடர்ந்து அதிகரிப்பு

May 27 2020 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரு நாட்டில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை உதாசீனப்படுத்திய பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாகக் கூடுவது ஆபத்தை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பெரு நாட்டில் தினமும் கொரோனா வைரசால் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இரண்டாம் இடத்துக்கு கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஜுன் மாத இறுதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதில் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துவருகின்றன. ஒட்டுமொத்த பாதிப்பில் 62 சதவிகிதம் பேர் தலைநகர் லிமாவில் தான் கண்டறியப்பட்டுள்ளனர் என்ற நிலையில், பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் கடைகளில் கூடிவருகின்றனர். ஊரடங்கு விதிகளைக் கடைபிடித்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றே பலர் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00