இந்தியாவும், சீனாவும், தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் - ஐக்‍கிய நாடுகள் சபை வேண்டுகோள்

May 30 2020 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவும், சீனாவும், தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஐக்‍கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியா, சீனா இடையே கடந்த 5-ம் தேதி முதல் லடாக் மற்றும் சிக்‍கிம் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு எல்லையிலும் சீன படைகள் அத்துமீறியதால், பதில் நடவடிக்‍கையாக, அங்கு இந்திய ராணுவமும் குவிக்‍கப்பட்டுள்ளது. போருக்‍கு தயாராகும்படி, சீன வீரர்களுக்‍கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டதாக தகவல் வெளியான நிலையில், இந்தியா-சீனா இடையே சமரசம் செய்துவைக்‍க தயார் என அமெரிக்‍கா தெரிவித்தது. அமெரிக்‍காவின் யோசனையை இரு நாடுகளும் நிராகரித்து, பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண முற்பட்டுள்ளன. இந்நிலையில், தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில், இந்தியாவும், சீனாவும் இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00