தென்னமெரிக்க நாடான சிலியில் 90 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிப்பு
May 30 2020 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிலியில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், தற்போதைய தட்பவெப்பமும் அதற்குச் சாதகமாக மாறியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வசந்தகாலம் தொடங்கியதால் வெப்ப நிலை மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் அந்நாடு சீனாவை மிஞ்சியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சான்டியாகோ நகரில் உள்ள மருத்துவமனைகளில் 97 சதவிகிதம் கொரோனா வைரஸ் நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என அந்நாட்டு அரசு அச்சம் தெரிவித்துள்ளது.