வெட்டுக்கிளிகளால் உலக அளவில் பெரும் இழப்புகள் ஏற்படும் என ஐ.நா. எச்சரிக்கை - நகர்ப்புறங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது என்றும் தகவல்
May 30 2020 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெட்டுக்கிளிகளால் உலக அளவில் பெரும் இழப்புகள் ஏற்படும் என்று கூறியுள்ள ஐ.நா. அமைப்பு, அதேநேரம், நகர்ப்புறங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், வெட்டுக்கிளிகள், அலை அலையாக படையெடுக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது. பீகார் மற்றும் ஒடிஷா மாநிலங்கள் வரை, அதன் நகர்வுகள் இருக்கலாம் என்றும், பருவமழைக் காலத்தில், காற்றின் போக்கில் ஏற்படும் மாறுதலை ஒட்டி மீண்டும் ராஜஸ்தானுக்கு அவை பின்வாங்கலாம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதேநேரம், உணவு கிடைக்காது என்பதால், வெட்டுக்கிளிக் கூட்டம் நகர்ப்புறங்களை விரும்பாது என்றும், அவை மனிதர்களை தாக்காது என்றும் தெரிவித்துள்ளது. ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிவிப்பை மேற்கோள்காட்டி, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, தென்னிந்தியாவில் இருக்காது என்று மத்திய வேளாண் அமைச்சகம் கூறியுள்ளது.