கொரோனாவை விஞ்சிய காதல் - சிகிச்சை அளித்த மருத்துவரையே கரம்பிடித்த இளைஞர்
May 31 2020 10:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எகிப்து நாட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரை காதலித்து, இளைஞர் திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் எகிப்து நாட்டில் அரங்கேறிய காதல் உலகில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆயிஷா மொசபா என்ற பெண், எகிப்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முகமது பாமி என்பவர், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர் ஆயிஷா, அந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்து வந்தார். அப்போது, அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து இரண்டு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த முகமது பாமி, மோதிரம் அணிந்து ஆயிஷாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். இதற்கு சற்றும் மறுப்பு தெரிவிக்காமல் அவரது காதலை ஆயிஷாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது அதன் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.