தென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா : திறந்த பள்ளிகளை மூட அரசு உத்தரவு
May 31 2020 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியதை அடுத்து, ஏற்கெனவே திறந்த பள்ளிகளை அந்நாட்டு அரசு மூட உத்தரவிட்டுள்ளது.
தென்கொரியாவில் 11 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 269 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது அங்கே மீண்டும் கொரோனா தலைதூக்கியுள்ளது. தலைநகர் சியோலில் இம்மாதத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக 250 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கரோனா ஊரடங்கு முடிந்ததும் திறக்கப்பட்ட மதுபான விடுதிகள் மற்றும் நைட் கிளப்புகளுக்குச் சென்று வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கிற்குப் பின் திறக்கப்பட்ட பள்ளிகளை இழுத்து மூடியதுடன், பூங்காக்கள், மால்கள், கிளப்புகள், பார்கள், மியூசியங்கள் ஆகியவற்றையும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசரமாக மூடி அந்நாட்டு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சமூக விலகல் நடைமுறைகளைக் கடுமையாக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, 'தென்கொரியாவின் அமேசான்' என்று முதலீட்டாளர்களால் பாராட்டப்பட்டு வரும் இணைய வர்த்தக நிறுவனமான Coupang-ல் பணிபுரியும் தொழிலாளர்களில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மற்ற அனைத்துத் தொழிலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.