இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாராகிவிடும் - 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக சீன மருந்து நிறுவனம் தகவல்
Jun 1 2020 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாராக இருக்கும் என சீன மருந்து நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 200-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. சீனாவை தொடர்ந்து, அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் என பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வைரசுக்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் பல நாடுகள் இறங்கின. இப்போது, சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அரசுக்கு சொந்தமான சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.