சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 லட்சத்து 62 ஆயிரமாக உயர்வு - பலி எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது
Jun 2 2020 10:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 77 ஆயிரத்து 149 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 3 லட்சத்து 77 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 லட்சத்து 61 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 629 பேர் பலியான நிலையில், 18 லட்சத்து 59 ஆயிரத்து 441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 29 ஆயிரத்து 18 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் நேற்று ஒரேநாளில் 9 ஆயிரத்து 35 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 718 பேரும், பிரிட்டனில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 332 பேரும், இத்தாலியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 197 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, 29 லட்சத்து 48 பேர், குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 30 லட்சத்து 84 ஆயிரத்து 682 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில், உலகளவில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது