கொரோனா வைரஸ் தமது ஆற்றலை இழந்துவிட்டது : இத்தாலி மருத்துவர்கள் புதிய தகவல்
Jun 2 2020 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தமது ஆற்றலை இழந்துவிட்டதாக இத்தாலி மருத்துவர்கள் கூறி உள்ளனர். இத்தாலியில் பிப்ரவரி 21ம் தேதி கொரோனா பரவியதில் இருந்து 33 ஆயிரத்து 415 பேர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கையில் உலகளவில் 3-வது இடத்தில் இத்தாலி உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசின் ஆற்றல் இழந்து விட்டது என்பதை குறைவான மரணங்கள் வழியே உறுதி செய்துள்ளதாக, இத்தாலியின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறி உள்ளார். உண்மையில், வைரஸ் மருத்துவ ரீதியாக இனி இத்தாலியில் இல்லை என்று மிலனில் உள்ள சான் ரபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜாங்ரில்லோவும் கூறினார்.