புகைப் பழக்கத்தை ஒழிக்க புதிய வடகொரியாவில் புதிய நடவடிக்கைகள் - இளைஞர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிக்க திட்டம்
Jun 2 2020 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க புதிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்தியில், இயற்கையான மூலிகைகளிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பொருட்கள் புகையிலைக்கு மாற்றாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது. இதே போல், புகையை மறக்க முயற்சிக்கும் இளைஞர்களுக்கு ஆலோசனை அளிக்கவும் இந்த மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பபட்டுள்ளன. மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் புகைக்கு எதிராக பிரச்சார இயக்கங்களை நடத்திவருவதாகவும், இதனால் இளைஞர்கள் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.