கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷ்யா - ராணுவ வீரர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க திட்டம்
Jun 3 2020 2:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ராணுவ அதிகாரிகள் 50 பேருக்கு செலுத்தி பரிசோதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ராணுவ அதிகாரிகள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் முதல்முறையாக கடந்த ஜனவரி 31ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் அங்கு தொற்று பரவுவது மந்தமாக இருந்தாலும், ஏப்ரல், மே மாதங்களில் அதிதீவிரமாக கொரோனா பரவியது. நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் அங்கு கொரோனா பாதிக்கப்பட்டு வருகின்றனர்.