கருப்பினத்தவர் கொலை - போராட்டங்களைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

Jun 3 2020 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கருப்பினத்தவர் கொலை தொடர்பாக, பல்வேறு அமெரிக்க நகரங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை எதிர்த்து லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் சிகரெட் வாங்கிய கருப்பின நபரான ஜார்ஜ் ஃப்ளாய்ட், கள்ள நோட்டைக் கொடுத்து ஏமாற்ற முயன்றார். கடந்த 25ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் அதிகாரி டெரெக் சாவின் உள்ளிட்ட நான்கு பேர் அவரைக் கைது செய்ய முயன்றபோது, டெரெக் சாவின் தமது முழங்காலால் கழுத்தை நெறித்ததில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார். போலீசாரின் இந்த அத்துமீறலைக் கண்டித்து அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. போராட்டங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட உரடங்களைக் கண்டித்து நடந்த போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00