வுகான் நகரில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பரிசோதனை : கொரோனா நோய் தொற்று முழுமையாகக் குறைந்தது
Jun 3 2020 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவுதல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அண்மைய பரிசோதனைகள் தெரிவித்துள்ளன.
முதன்முதலில் சீனாவின் வுகான் நகரில் இருந்து தான் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. பின்னர் அந்நாட்டு அரசின் உறுதியான நடவடிக்கைகளால் வைரஸ் பரவல் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், வுகான் நகரில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் ஒரு கோடி பேருக்கு இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், வுகான் நகரில் நோய் தொற்று ஏறத்தாழ முழுமையாகக் குறைந்து விட்டதாகவே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பொதுமக்கள் அனைவரும் மேலும் சில வாரங்களுக்கு பாதுகாப்பு உணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.