சீனாவின் ஹூபே மாகாணத்தில் சிகிச்சை பெற்றுவந்த அனைவரும் குணமானதாக அறிவிப்பு
Jun 5 2020 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் ஹூபே மாகாணத்தில் சிகிச்சை பெற்றுவந்த அனைவரும் குணமாகியதால், தற்போது கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் யாருமற்ற பகுதியாக மாறியுள்ளது.
ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரிலிருந்து தான் முதன்முதலில் உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அந்நகரை நாட்டின் பிறபகுதிகளிலிருந்து அந்நாட்டு அரசு முழுமையாகத் துண்டித்தது. தற்போது உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துவருகின்றன. ஆனால், சீன அரசின் உறுதியான நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹூபே மாகாணத்தில் சிகிச்சை பெற்றுவந்த அனைவரும் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து குணமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா பாதித்தவர்கள் யாருமற்ற பகுதியாக மாறியுள்ளது.