ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் ஏர்பஸ் : பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பிரான்சில் தொடர் போராட்டம்
Jul 10 2020 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதைக் கண்டித்து பிரான்சில் எராளமானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஐரோப்பிய நிறுவனமான ஏர்பஸ், உலகின் முன்னணி விமான நிறுவனமாக விளங்குகிறது. நெதர்லாந்தில் பதிவு அலுவலகத்தைக் கொண்டுள்ள ஏர்பஸ், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்நிலையில், ஏர்பஸ்ஸின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்சில் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கானோர் இணைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அந்நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை மற்றும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடையே எதிர்ப்பு வலுத்துவருகிறது.