தென்கொரியாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட சியோல் நகர மேயர் சடலமாக மீட்பு
Jul 10 2020 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கொரியாவின் சியோல் நகர மேயர் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தென்கொரிய தலைநகர் சியோல் நகரின் மேயராக 2011ம் ஆண்டு முதல் பதவி வகித்துவரும் Park Won-soon, நேற்று திடீரென மாயமானதாக அவரது மகள், காவல் துறையில் புகாரளித்தார். இதனடிப்படையில், உடனடியாக விசாரணையைத் தொடங்கிய போலீசார், மேயரின் செல்ஃபோன் சிக்னல் கடைசியாகப் பதிவான பகுதிகளில் தேடுதல் மேற்கொண்டனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், Mount Bugak பகுதியில் Park Won-soon-இன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது இறப்புக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை.