கொரோனா காலத்தில் தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது - ராகுல்காந்தி கருத்து
Jul 10 2020 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா நெருக்கடி காலம் நீடித்து வரும் நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது ஆபத்தானது என காங்கிரஸ் கட்சியின் திரு.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுரித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பல்கலைக்கழக மானியக்குழு, தேர்வுகள் குறித்து மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறிந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்சியை அறிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.