சைபீரியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ - செயற்கை மழையைக் கொண்டு அணைக்கும் முயற்சியில் ரஷ்ய அரசு
Jul 11 2020 10:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சைபீரியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயை, செயற்கை மழையைக் கொண்டு அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் உள்ள சைபீரியக் காடுகளில் 158 இடங்களில் கடந்த சில நாட்களாக தீ பற்றி எரிந்து வருகிறது. தற்போதைய நிலையில் 46 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான காட்டுப்பகுதிகளில் தீ எரிகிறது. ஆனால், தீயை அணைக்கும் முயற்சிகள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால், செயற்கை மழை பெய்விக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான வேதிப்பொருட்களை விண்ணில் தூவும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஏராளமான தீ அணைப்பு வீரர்களும் காடுகளுக்கு அனுப்பப்பட்டு, நிலைமையை சரிசெய்ய போராடிவருகின்றனர். தீ அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.