துருக்கியில், அருங்காட்சியகத்தை மசூதியாக மாற்ற அதிபர் உத்தரவு - நீதிமன்ற அறிவிப்பைத் தொடர்ந்து நடவடிக்கை
Jul 11 2020 10:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கியில் உள்ள ஹேகியா சோஃபியா என்ற அருங்காட்சியகத்தை மசூதியாக மாற்றி அதிபர் எர்துவான் உத்தரவிட்டுள்ளார்.
துருக்கியில் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தேவாலயமான ஹேகியா சோஃபியா, கடந்த 1934ம் ஆண்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. அந்த அருங்காட்சியகத்தை மசூதியாக மாற்ற துருக்கி அரசு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இதற்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக, உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில், அதை மசூதியாக மாற்றமுடியும் என அந்நாட்டு நிர்வாக நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அந்த அருங்காட்சியகத்தை மசூதியாக மாற்றி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான் ஆணை பிறப்பித்துள்ளார். இதற்கு ரஷ்யா, இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆர்த்தடோக்ஸ் கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.