யானைகளை விட்டுவிட்டு எறும்பு திண்ணிகள் கடத்தப்படுவது மிகவும் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்
Jul 11 2020 10:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக அளவில் யானைத் தந்தங்கள் கடத்தப்படுவது குறைந்தாலும், எறும்பு திண்ணிகள் கடத்தப்படுவது மிகவும் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் யானைகள் கொல்லப்பட்டு, தந்தங்கள் கடத்தப்பட்டு வந்தன. இந்த தந்தங்கள், சீனா போன்ற நாடுகளில் பல்வேறு அணிகலன்கள் மற்றும் அலங்காரப்பொருட்களாக மாற்றப்பட்டு, சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டுவந்தன. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கையால் யானைகள் கொல்லப்படுவது பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், எறும்பு திண்ணிகள் கடத்தப்படுவது மிகவும் அதிகரித்துள்ளது. எறும்பு திண்ணிகளின் உடலில் உள்ள செதில்களைக் கொண்டு, சீனாவில் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.