லண்டனில் விலங்குகளின் உரிமைகளை நிலை நாட்டக்கோரி போராட்டம் : தண்ணீரில் சிவப்பு வண்ணத்தை கலந்த போராட்டக்காரர்கள்
Jul 12 2020 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விலங்குகளின் உரிமைகளைக் காக்க லண்டன் நகர செயற்கை நீரூற்றுகளில் சிவப்பு வண்ண பெயின்டுகளை ஊற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்கள் பரவாமலிருக்கும் விதத்தில், விலங்குகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்துவதை தடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவது கொடுமையான செயல் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், விலங்குகள் அனுபவிக்கும் வேதனையைக் குறிக்கும் வகையில் செயற்கை நீரூற்றுகளில் சிவப்பு வண்ணத்தைக் கலந்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இப்போராட்டத்தின் போது குற்றமிழைத்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.