பாரீஸில் விரைவில் அறிமுகமாகவுள்ள மிதவை தியேட்டர் : சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண படகுகள் தயார்
Jul 12 2020 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சமூக தொலைதூர படகுகளில் இருந்து மக்கள் பார்க்கக்கூடிய மிதவை தியேட்டர் ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் 18-ம் தேதி சீன் நதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பாரிசில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பாரிஸ் பிளேஜஸ் என்ற நிகழ்ச்சி சீன் ஆற்றில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு இந்நிகழ்ச்சி வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக மிதவை தியேட்டர் வரும் 18-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்கிக்கு சுர்-எல்-யோ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் 'தண்ணீரில் சினிமா' என்பதாகும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள மிதவை தியேட்டரில் திரையிடப்படும் திரைப்படத்தை சமூக இடைவெளியுடன் காண 38 படகுகளில் தயார் படுத்தப்பட்டுள்ளன.