கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை : மனிதர்களுக்கு வெற்றிகரமாக சோதித்ததாக ரஷ்யா தகவல்
Jul 13 2020 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு வெற்றிகரமாக சோதித்துள்ளதாக ரஷ்யாவின் கேம்லே தொற்றுநோய் மற்றும் நுண் உயிரியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதில் சில நாடுகள் முதற்கட்ட சோதனையில் வெற்றிபெற்று அடுத்தடுத்த கட்ட சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு வெற்றிகரமாக சோதித்துள்ளதாக ரஷ்யாவின் கேம்லே தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து, கடந்த மாதம் 18-ம் தேதி முதல் மனிதர்களுக்கு சோதிக்கப்பட்டு வருவதாகவும், அது பாதுகாப்பானதாக உள்ளதாகவும், கேம்லே தொற்றுநோய் மற்றும் நுண் உயிரியல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வேடிம் தெரசவ் கூறியுள்ளார்.