உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியதற்கு கண்டனம் : 18 நாடுகள் இணைந்து நிறைவேற்றிய கண்டன தீர்மானம்
Jul 13 2020 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர் பட்டியலில் இருந்து வெளியேறிய அமெரிக்காவைக் கண்டித்து 18 நாடுகள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் முதன் முதலில் பரவியது. இதற்கு, கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை தொடக்கத்தில் சீனா மறைத்ததே காரணம் என்றும், அதற்கு உலக சுகாதார அமைப்பு உதவியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சுமத்திவந்தார். இறுதியில், உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர் பட்டியலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்தார். இது உலக நாடுகளின் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவைக் கண்டித்து, ஐரோப்பா, தென்னமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. இதற்காக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இணைந்து நடத்திய சந்திப்பில், ஸ்வீடன், அர்ஜென்டினா, கொலம்பியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்றன. கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணியில் உலக சுகாதார அமைப்பு முக்கிய பங்காற்றுவதாக, இந்த சந்திப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.