நேபாளத்தில் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு : 40 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
Jul 13 2020 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளத்தில் பலத்த மழை பெய்ததால், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் மியாக்தி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது. தலைநகர் காத்மண்டுவிலிருந்து வடமேற்கில் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில், பலத்த மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைப்பகுதியில் இருந்த வீடுகள் நிலச்சரிவினால் இடிந்துவிழுந்தன. இதில் சிக்கி இருபது பேர் உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள 13 பேரை மீட்கும் பணிகள் நடந்துவருகின்றன. இதற்கிடையே, வெள்ளத்தில் சிக்கி மேலும் 20 பேர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் க்யான் நாத் டாக்காய் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்யும் அபாயம் இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது.