கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்து : ஆஸ்திரேலியாவில் தன்னார்வலர்களுக்கு செலுத்தி முதல்கட்ட பரிசோதனை
Jul 13 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை சோதனை முறையில் பயன்படுத்தும் முயற்சிகள் ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளன.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து முதன் முதலாக பிரிஸ்பேன் நகரில் தன்னார்வலர்களுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட முடிவுகள் செப்டம்பர் மாத இறுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் அளிக்கப்பட்ட மருந்துகள் மூலம் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கிப் பயன்படுத்த உலகின் முன்னணி சோதனைக்கூடங்கள் எடுத்து வரும் முயற்சிகளும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. சீனாவில் இரண்டு வகையான தடுப்பு மருந்துகள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளன.