நேபாளத்தில் கடும் மழை மற்றும் நிலச்சரிவு - 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Jul 14 2020 10:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளத்தில், கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, கடந்த 4 நாட்களில் 60 பேர் பலியாகி உள்ளனர்.
அண்டை நாடான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில், பருவமழை தொடங்கியதன் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரம் மற்றும் கிராமப்புறங்களில், பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள் மற்றும் கட்டடங்களை சுற்றி வெள்ள நீர் தேங்கியுள்ளது. நேபாளத்தின் மேற்கே மியாக்தி மாவட்டம் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் இதுவரை, 27 பேர் பலியாகி உள்ளனர்.
வெள்ளப் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கானோர், சமூகநல மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்கை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த இரு சம்பவங்களிலும் சிக்கி இதுவரை, 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், காணாமல் போன 41 பேரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.