டிக்டாக் செயலியை முடக்கும் விதத்தில் அமெரிக்க அதிபர் செயல்படுவது சர்வதேச வர்த்தக விதிகளுக்கு எதிரானது - ரஷ்யா கண்டனம்
Aug 9 2020 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டிக்டாக் செயலியை முடக்கும் விதத்தில் அமெரிக்க அதிபர் செயல்படுவது சர்வதேச வர்த்தக விதிகளுக்கு எதிரானது என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.
சீனாவின் ByteDance நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டாக் செயலியை தடை செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். ஆனால், அந்தச் செயலியை வாங்கப் போவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சத்யா நாதெல்லா, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பேச்சு நடத்தினார். அதன்படி, செப்டம்பர் 15ம் தேதிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டு, அந்நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கையகப்படுத்தவேண்டும் என்ற நிபந்தனையும் டொனால்ட் ட்ரம்ப் அனுமதியளித்தார். ஆனால், அதற்குப் பின், அந்நிறுவனத்துடன் எந்த விதமாக வரவு-செலவுகளையும் அமெரிக்க நிறுவனங்கள் அடுத்த 45 நாட்களுக்கு மேற்கொள்ளக்கூடாது என ட்ரம்ப், ஒரு நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார். இந்நிலையில், டிக்டாக் தொடர்பான அதிபரின் நடவடிக்கைகள் சர்வதேச வர்த்தக விதிகளுக்கு முரணானவை என ரஷ்யா தெரிவித்துள்ளது.