இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் பீய்ச்சியடிக்கப்பட்ட சாம்பல், புகை : பாதுகாப்பாக இருக்கும் படி பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Aug 10 2020 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் சாம்பல் மற்றம் புகை ஐந்து கிலோ மீட்டர் உயரத்துக்கு பீய்ச்சியடிக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உள்ள சினாபங் எரிமலை வெடித்துச் சிதறியது. கடந்த இரண்டு மூன்று தினங்களாகவே உருமிக்கொண்டிருந்த எரிமலை எப்போதும் அதிக அளவில் குழம்பை பீய்ச்சியடிக்கும் அபாயம் இருப்பதால் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதே போல் ஏராளமான சாம்பலும் காற்றில் பரவும் அபாயம் இருந்ததால் பதுகாப்பான முகக்கவசங்களை அணியுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது எரிமலை வெடித்துச் சிதறியதால் ஐந்து கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பலும், புகையும் பீய்ச்சியடிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதுகாப்புக இருக்கும் படி மீண்டும் அறிவுறுத்தப்பட்டனர்.