சீனாவின் கைது நடவடிக்கைகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக ஜப்பான் விமர்சனம்
Aug 11 2020 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டன் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் நகரம் கடந்த 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சீனாவின் கடுமையான, பொதுமக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலான சட்டதிட்டங்களை ஹாங்காங்கில் அமல்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சீனா, ஒரே நாடு இரு கொள்கை என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டது. இருப்பினும், ஹாங்காங் அரசியலில சீனாவின் தேவையற்ற தலையீடுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவந்தன. இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் தேசிய பாதுகாப்பு சட்டம் மூலம் ஹாங்காங்கையும் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதன் பின், உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை சீனா தொடங்கியது. இதற்கு ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.