கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தது ரஷ்யா- களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை
Aug 11 2020 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்த முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசு கூட்டத்தில் பேசுகையில், கொரோனா தடுப்பூசி, தேவையான அனைத்து சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகவும், இந்த தடுப்பூசி வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாகவும் தெரிவித்தார். தனது மகளுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும், புதின் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதாக, ரஷ்ய அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு, தடுப்பூசி முதலில் போடப்படும் எனவும், புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பிய நிலையிலும், தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.